Thursday 19 September 2019

இயேசு இந்த பூமியில் எப்படி வாழ்ந்தார்

இயேசு இந்த பூமியில்... 1.இயேசு யாரையும் ஆக்கினைக்குள்ளாக அதாவது குற்றவாளியாக தீர்த்தது இல்லை (யோவான் 8:11) 2.இயேசு உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார் (யோவான் 8:12) 3.இயேசு தன்னை குறித்து நன்கு அறிந்து இருக்கிறார் (யோவான் 8:14) 4.இயேசு தனித்து இருக்கவில்லை (யோவான் 8:16) 5.இயேசு உலகத்திலிருந்து (மாம்சத்தின் இச்சை , கண்களின் இச்சை , ஜீவனத்தின் பெருமை) உண்டானவர் அல்ல (யோவான் 8:23 ) 6.இயேசு பிதாவினிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்கு கூறுகிறார் (யோவான் 8:26) 7.இயேசு பிதாவுக்கு பிரியமான காரியங்களையே செய்தார் (யோவான் 8:29) 8.இயேசு பிதாவை கணம் பண்ணுகிறார் (யோவான் 8:49) 9.இயேசு தனக்கான மகிமையை தேடினது இல்லை (யோவான் 8:50) 10. இயேசு பிதாவை நன்கு அறிந்து இருந்தார் (யோவான் 8:55) இயேசுவை போலவே இந்த பூமியில் வாழுவோம். உலகத்திற்கு ஒளியாக இருப்போம்

Saturday 24 August 2019

தங்கத்தை பற்றி வேதகாமம் சொல்லுவது என்ன ?

சகோதரர். சகரிய பூணன் செய்தியில்  படித்ததில் பிடித்தது ...
தங்கம் நல்லதுதான் ஆனால் நாம் அதை வேலைக்காரனாக வைத்து இருக்க வேண்டும். வேதம் சொல்கிறது. பரலோகத்தில் தங்கம் உள்ளது . ஆனால் அது எங்கு இருக்கிறது என்று பார்த்தால் , அதுதான் பரலோகத்திற்கு பூலோகத்திற்கும் உள்ள வித்தியாசம். பூமியில் தங்கம் கழுத்திலும்,தலைக்கு கிரீடமாக உள்ளது .ஆனால் பரலோகத்தில் நமது காலடியில் இருக்கும். அதில் தான் ரோடு போடப்பட்டுள்ளது. நாம் அதன் மேல் நடந்து செல்வோம். பரலோக சிந்தை உள்ள மனிதனுக்கு தங்கம் காலடியில் இருக்கும்.அது அவனை ஆளுகை செய்யாது. பூமிக்குரிய கிறிஸ்தவனுக்கோ தங்கம் அவன் தலையிலும். மனதிலும் இருக்கும். அவனும் அதை நேசிப்பான். எப்படியெனில் ஒரு வாலிபன் தான் நேசிக்கும் ஒரு பெண்ணை எப்பொழுதும் நினைத்து கொண்டிருப்பதை போல நீ எப்பொழுதும் பணத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் பணத்தை நேசிப்பவனாய் இருப்பாய். பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாய் இருக்கிறது.