Friday 27 October 2017

யார் கிறிஸ்துவர்கள்.

                                      விசுவாசி கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , அந்நிய பாஷை பேசுகிறவர்கள். கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , அதிகமாக ஜெபிக்கிறவர்கள் கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , சுவிசேஷம் சொல்லுகிறவர்கள் கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , போதகம் செய்கிறவர்கள்  கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , நன்கு வேதம் தெரிந்து வியாக்கியானம் செய்பவர்  கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை. சுகமாக்கும் வரம் கொண்டவர்கள் கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை.  ஆலயத்துக்கு செல்கிறவர்கள்   கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , சாதி சான்றிதழில் கிறிஸ்துவன் என்று இருப்பதினால் கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , இப்படி பட்டவர்களால் உண்மையான  கிறிஸ்தவர்கள்  மறைக்கபடுகிறார்கள் மேலும் இப்படிப்பட்டவர்களால் புறஜாதி மக்கள் இயேசுவின் அண்டை வரமுடியவில்லை கிறிஸ்து உங்களுக்குள்  இருந்தால் அவருடைய ஜனங்கள் உங்களோடு இருப்பார்கள் . அப்படியானால் யார்தான் கிறிஸ்துவர்கள்? என்று நினைக்கிறீர்களா? எளிதாக சொல்லிவிடலாம்  கிறிஸ்துவை பின்பற்றுகிற சீஷர்கள் தான் கிறிஸ்துவர்கள் என்று பரிசுத்த வேதகாமம் சொல்கிறது( அப்போஸ்தலர் 11. 26). உண்மைமையான சீஷர்களாக இருக்க விரும்புங்கள்

ஏனென்றால் சீஷர்கள் தான் அதிக கனிகளை தருகிறார்கள். அவர்களுக்கு இரண்டு குணங்கள் உண்டு ஒன்று தன்னைத்தான் வெறுக்கிறது மற்றொண்டு சிலுவையை எடுப்பது. என் சித்தம் அல்ல உம்முடைய சித்தம் ஆககடவது என்று அர்ப்பணிப்பவர்கள்.

இவர்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளை சிலுவையில் சிதைத்தவர்கள். கலாத்தியர் 5 :24

இவர்கள் மற்றவர்கள் பரிசுத்தமாகும்படி தன்னைத்தான் பரிசுத்தமாக்கிறவர்கள், யோவான் 17:19

இவர்கள் கிறிஸ்துவின் மேல் அன்பு வைத்தத்தினால் அவருடைய வார்த்தை கை கொண்டு கீழ்படிக்கிறவர்கள்.  யோவான் 14:15

இவர்கள் விசாலமான வழியை அல்ல இடுக்கமான வழியில் ஜீவனை கண்டவர்கள். மத்தேயு 7:14

இவர்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மட்டும் அல்ல அவருக்கா பாடு படுகிறவர்கள். பிலிப்பியர் 1:29

இவர்கள் இயேசு கிறிஸ்து இருக்கிற வண்ணமாக அவருடைய சாயலில் இருக்க விரும்புவர்கள். சாந்தமும் தாழ்மையுமாய் இருந்து நான் சிறுகவும் அவர் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள்மத்தேயு 11:29

இவர்கள் பிதாவையும் அவருடைய குமாரனையும் அறிந்தவர்கள். அவரை அறிவதற்கு எல்லாத்தையும் நஷ்டம் என்று விட்டவர்கள்.

இவர்கள் இயேசு கிறிஸ்துவால் தாயும் தகப்பனும் என்று புகழப்பற்றவர்கள்.

இவர்கள் தங்களை தாங்களே நியாயம் தீர்த்து வாழ்கிறவர்கள். கிறிஸ்துவின் வருகையின் போது அவரோடு நியாயம் விசாரிப்பவர்கள்.

இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமானத்தை செய்பவர்கள். அவருடைய சித்தம் செய்வதை போஜனமாக கொண்டவர்கள். 

இவர்கள் சுவிசேஷத்தை ஆதாய தொழிலாக கொள்ளாமல் அவருடைய அன்பினால் நிறைந்து ஊழியம் செய்கிறவர்கள். இவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட்டு , கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள்.  தேவனை அப்பாவாக அறிந்தவர்கள். சீஷர்கள் இந்த பூமியில் உத்தம வழிகளை பின்பற்றுகிறவகார்களை இருக்கிறார்கள். 

இவர்கள் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நன்கு உணர்ந்தவர்களை இருக்கிறார்கள். இயேசு கூறின ராஜரீக பிரமானத்தினை நிறைவேற்றுகிறார்கள், எப்போதும் அன்பின் கட்டுகளோடு இருக்கிறார்கள்.

எனவே கிறிஸ்துவுக்கு சீஷர்காளாக எழும்புவீர்களாக. கிறிஸ்துவனாக 
ஆமென்...



எழுதியவர் : தானியேல் 

Thursday 19 October 2017

தேவ பெலன்

                                       எழுதியவர் : தானியேல் 


                         
                                    ஒரு மனிதன் இரட்சிக்கபடுவதற்கு தேவனுடைய பெலன்  முக்கியமாய் இருக்கிறது (ரோமர் 1 : 16).. வேதத்தில் இருந்து  மூன்று காரியங்கள்  தேவபெலனாயிருக்கிறது என்று சொல்கிறது . தேவனுடைய  பெலன் எப்பொழுதும் உங்களிடம் இருக்கும் பொழுது சாத்தான் உங்கள் கால் அடியில் இருப்பான். எனவே நீங்கள் எப்பொழுதும் தேவனுடைய பெலனுடையவர்களாக இருக்க வேண்டும் அப்பொழுது  தேவனுடைய நாமம் உங்களால் மகிமைப்படும்.

                               ஓன்று,  தேவனுடைய வார்த்தை எப்படியென்றால் தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும் நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்தீர்கள் (1 யோவான் 2:14) என்று  சொல்கிறது . இந்த வசனத்தின்படி நாம் ஜெயம் கொள்வதற்கு தேவ வசனம் பெலனாய் இருக்கிறது. நாம் தேவனுடைய இருதயத்தை அறிந்து அவருடைய வசனத்துக்கு கீழ்ப்படியும் போது, பெலவானாய் மாறுகிறோம்.

                                    இரண்டு நமக்கு பெலனாய் இருப்பது பரிசுத்த ஆவியாகிய தேவன் . எப்படியென்றால் ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார் ( ரோமர் 8 :26 ), ஆவியின் சிந்தையை நன்கு அறிந்தவர் ஆவியானவர் , அவர் நம்முடைய இருதயங்களில் வாசம் செய்யும் பொழுது  நாம் பெலவானை மாற முடியும். பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்று (லூக்கா 11 : 13 ) என்று  இயேசு கூறுகிறார். நாம் பெலவானை இருப்பதற்கு பரிசுத்த ஆவியை கேட்க வேண்டும் என்று உற்சாக படுத்துகிறேன் .

                                    மூன்றாவது நமக்கு பெலனாய் இருப்பது ஏக சிந்தை கொண்ட கிறிஸ்தவர்களிடம் கொண்டிடும் ஐக்கியம் ஆகும். பாவத்துக்கு விலகியோடி சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாட வேண்டும் என்று (II தீமோத்தேயு 2 : 22) கூறுகிறது. நாம் கிறிஸ்துவுக்குகாக தனியாக எரிந்து விடலாம் என்று நினைத்தால் சீக்கிரத்தில் நம்முடைய பெலன் அணைந்துவிடும். நம்மிடத்தில் அனல் இல்லமால் நாளடைவில் குளிர்த்து போய்விடும்  எனவே ஐக்கியத்தை நாட வேண்டும் ஆனால் எல்லாரிடமும்  ஐக்கியமாய்  இல்லாமல்  சுத்த இருதயம் உள்ளவர்களிடம் மட்டும் ஐக்கியத்தை  நாடுங்கள் , அப்பொழுது நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் இவைகளை பெற்று பெலவானை இருப்பீர்கள் 

திருடன் திருடவும் கொள்ளவும் அளிக்கவுமே வருகிறான் என்பது உண்மை இதில் இருந்து நாம் இரட்சிக்கப்படுவதற்கு (பாதுகாப்பாய்  இருப்பதற்கு)  தேவ பெலன் நமக்குள் இருக்கவேண்டும். தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் ...


Wednesday 11 October 2017

பஸ்கா - Paasover


எழுதியவர் : தானியேல்
பஸ்கா

பஸ்கா என்பது பழைய உடன்படிக்கையில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்படுத்தின ஒரு பண்டிகை. இந்த பண்டிகையின் முக்கியமாக இரண்டு காரியங்கள் கருதப்படுகிறது ஒன்று  ஜனங்களுக்காக ஒரு ஆடு அடிக்கப்படுகிறது. மற்றோன்று அதை புளிப்பில்லாத அப்ப பண்டிகையை கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு காரியங்களும் அநேக பிரமானங்களுக்கும், எதற்காக கொண்டாடப்படுகிறது  என்றும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்றும்யாத்திரகமாம்  அதிகாரத்தில் ஆண்டவரால் மிக தெளிவாக சொல்லப்படுகிறது. . இதில்  ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் இஸ்ரவேல் ஜனங்கள் காக்கப்பட்டனர். அதனால் ஜனங்கள் புளிப்பில்லாத அப்பபண்டிகையை  கொண்டாடப்படுகிறது   இது தலைமுறை தலைமுறையாக கொண்டாடபட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.



புதிய உடன்படிக்கையில் வாழும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆட்டின் இரத்தம் போதுமானது அல்ல. அதனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே பலியாக்கப்பட்டார் .நம் மீது அன்பு வைத்ததினால். அநேகர் இதை கொண்டாடுவதில்லை. கொண்டாடுபவர்கள் அதின் முக்கியத்துவத்தை அறிவதில்லை. இதனால் தான்  ஆவிக்குரிய மரணம்  நிகழ்கிறது.

எப்படியென்றால் பழைய உடன்படிக்கையில் ஜனங்கள் காக்கப்படுவதற்கு ஒரு ஆட்டின் இரத்ததின் மூலமாய் மாம்சீகமான மரணத்திலிருந்து  காக்கப்பட்டனர். ஆனால்  புதிய உடன்படிக்கையில் வாழும் நமக்கு ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து பலியாக்கப்பட்டார். அவருடைய குற்றமில்லாத இரத்தத்தினால் நாம்  ஆவிக்குரிய மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறோம் , ஆனால் இதை அநேகர் கொண்டாடுவதில்லை எப்படி கொண்டாட வேண்டும் என்றும் தெரியவில்லை. பவுல் கொரிந்தியர்க்கு சொல்லும் போது அதை விளக்குகிறார்
எப்படியென்றால் "நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.."  இந்த வசனத்துக்கு கீழ்படிந்தால் ஆவிக்குரிய மரணத்தில் இருந்து பாதுகாக்கப்படலாம் என்பது உண்மை. ஆவிக்குரிய மரணத்தில் இருந்து எல்லாரோயையும் பாதுகாக்க இயேசு கிறிஸ்து பலியாகினர்

அநேக சபைகளிலே துப்புரவு உண்மை என்கிற புளிப்பில்லாத அப்பத்தோடு கொண்டாட படுவதில்லை . எனவே தான் அது ஆவிக்குரிய சபையாக இல்லாமல் செத்த சபையை இருக்கிறது. பழைய உடன்படிக்கையில் மாம்சத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் மட்டும் பண்டிகைக்கு கலந்து கொள்ளவேண்டும். ஆனால் இப்பொழுது இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் மட்டும் அதில் கலந்து கொள்ளவேண்டும், ஆனால் இருதயத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்கள் கூட பண்டிகையை கலந்து கொள்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனை . அப்படி கலந்து கொள்பவர்கள் மெய்யாகவே மரணமடைவார்கள்அப்படிப்பட்டவர்கள் அறுப்புண்டு போவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஆவிக்குரிய சபையானது  துப்புரவு உண்மை என்கிற புளிப்பில்லாத அப்பபண்டிகையை ஆசரிப்பார்கள். அப்படிப்பட்ட சபையில் இருப்பவர்கள் பாக்கியவான்கள்.


Tuesday 1 August 2017

தேவன் யார் மீது சந்தோசமாக இருக்கிறார் ?



தேவன் நம் மீது அன்பாகவே இருக்கிறார் . அதை வைத்து அவர் என் மீது சந்தோசமாக இருக்கிறார் என்று கூறமுடியாது. அவர் நமக்கு அப்பாவாக இருக்கிறார் அதை வைத்து நம் மீது சந்தோசமாக இருக்கிறார் என்று கூறமுடியாது. மனிதர்கள் எல்லாரிடமும் அவர் சந்தோசமாக இருக்கிறார் என்றும் கூற முடியாது . அவர் பரிசுத்தமுள்ள தேவன் அவர்  நம்மை பரிசுத்தத்துக்கு அழைத்து இருக்கிறார். அந்த பரிசுத்தம் அவருடைய சத்திய வசனங்களில் இருக்கிறது. (யோவான் 17:17). அதை கை கொள்ளும்பொழுது, அதற்கு  உண்மையாய் கீழ்ப்படியும் போது நமக்குள் ஒரு ஜீவன்(இயேசு) பிறக்கும். அது நம்மை சாந்தமுள்ள சந்தோசத்தில் வைத்திருக்கும் .  இப்படியாய் நாம் சத்திய வசனங்களுக்கு கீழ்ப்படியும் போது தேவன் நம் மீது சந்தோசமாக இருக்கிறார். இதை காட்டிலும் வேற எதிலும் உங்களிலும் என்னிலும் பார்த்து சந்தோசப்படமாட்டார். என்பதை அறிய வேண்டும் . இந்த உலகில் பரிசுத்தமாய் வாழும் மனிதர்கள் குறைவு . ஆனால் நாம் அதை அடைவதற்கு அவருடைய சத்திய வசனத்துக்கு கீழ்ப்படியும் போது அவர் சந்தோசமாக இருக்கிறார்.  கைக்கொள்கிறதினால் வருகிற  அவருடைய ஜீவன். நம் மீது தேவன் சந்தோசமாக  இருக்கிறார் என்பதை உணர்த்திவிடும்



என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. (III யோவான்1 அதிகாரம், 4 வசனம் )

Friday 6 January 2017

பாடுகளை அனுபவித்தல்

எழுதியவர் : தானியேல் 

கிறிஸ்துவை நாம் அறியும் பொழுது நிச்சயமாகவே அவரை நாம் அனுபவிக்க முடியும்.  நாம் இந்த உலகத்தில் எப்படி கிறிஸ்துவை  அனுபவிக்க முடியும் என்பது தான் கேள்வி ? இயேசு கிறிஸ்து இந்த பூமியில் தேவனுடைய சித்தத்தை செய்ய எப்படி இந்த உலகத்தை அனுபவித்தார் என்று பார்த்தோமானால், அதே போல் நாமும் கிறிஸ்துவை அனுபவிப்போம். அவரை அறிந்து இருக்கிறேன் என்று சொல்கிற அனைவரும் கிறிஸ்துவை போல இந்த உலகத்தை அனுபவிக்க முடியும்.

தேவனுடைய  குமாரனாய் இருந்த இயேசு இந்த பூமியில் மனுஷகுமாரனாய்(சாதாரன மனுஷனாய்) இருந்தார். வேதத்தில் பார்க்கிறோம் இயேசு நம்மை போல் எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார் 
எபிரெயர் 4:15 என்று, மத்தேயு 4, லூக்கா 4 ஆம் அதிகாரத்தில் வெளிப்படையாகவே போடப்பட்டுள்ளது. பிசாசு, இயேசுவை  சோதிக்கும் போது மூன்று தடவையும் நீர் தேவனுடைய குமாரனா என்று சோதித்தான். இயேசு அந்த சோதனையை ஜெயித்தார். அன்று முதல் அவருடைய வாழ்க்கையில்  தன்னை மனுஷகுமாரன் (சாதாரன மனுஷன்) என்று எண்ணத்தை வைத்து இருந்தார் சிலுவையின் மரண பரியந்தமும்  அந்த வார்த்தைக்கு தகுதியானவாராயும்   இருந்தார். 

இந்த பூமியிலே  நாம் அனுபவிக்கிறதுக்கு அநேக காரியங்கள்  உள்ளது . கிறிஸ்து அனுபவித்த காரியங்களை நாம் அனுபவிப்போமானால் மிகவும் பாக்கியவான்களாக இருப்போம். அவர் அனுபவித்தது உலகத்தினால் உண்டானது அல்ல அது தேவனால் உண்டான காரியம் மட்டுமே. நாம் இந்த பூமியில் குடித்து வெறித்து வாழும் வாழ்க்கை அல்ல. அவர் அனுபவித்த பாத்திரத்தை யாராலும் விவரித்து கூறுவது கடினம்.அந்த பாத்திரமானது உயிர் இல்லாத சரீரம் எப்படி இருக்கும் அதை போன்றது இதை  சகோ.சகரியா பூணன்  கூறும்பொழுது "அந்த பாத்திரமானது இயேசு கிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் இருக்கும் ஐக்கியத்தை பிரிக்கும் காரியமாக இருந்தது", நாம் அனைவர் மீதும் அவர் அன்பு வைத்ததினாலும்  அந்த பிரிக்கும்  பாத்திரத்தை அனுபவித்தார். ஆம் சிலுவை வழியாக அந்த பாடுகளையும் துன்பத்தையும்  அனுபவித்தார். அவர் பட்ட பாடுகளை விவரித்து கூறுவது மனிதனால் கூடாது அதை ஆவியானவர் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வெளிப்படுத்துகிறார். அப்பொழுது கிறிஸ்துவின்  அன்பை பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயங்களில் ஊற்றுகிறார். அப்பொழுது கிறிஸ்துவின் அன்பு விளங்குகிறது. அவர் பட்ட பாடுகளை, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஆவியானவர் வெளிப்படுத்துவராக. 


நமக்கு கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்கும்  மட்டும்  அருளப்படவில்லை பாடு படுவதற்கும் அருளப்பட்டிருக்கிறது பிலிப்பியர் 1:29 . இதை பவுல் நன்கு உணர்ந்து அதிகமாய் பாடுகளை அனுபவித்தார்.  பவுல் இவ்விதமாய் பாடுகளை அனுபவித்தார் II கொரிந்தியர் 11 அதிகாரம்  24 .யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; 25. மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். 26. அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; 27. பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.   

II தீமோத்தேயு 2:3 , II தீமோத்தேயு 4:5  நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி, இறுதியாக அவருடைய உத்தம குமாரனாகிய தீத்துவிடமும் ,தீமோத்தேயுவிடமும் தீங்கநுபவிக்கவே கூறுகிறார். 

நாம் இந்த பூமியில் அனுபவிக்க வேண்டும் என்றால்.  துன்பங்களையும் , பாடுகளை அனுபவிப்போம். இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால் இந்த காரியங்களை அனுபவிப்போம் . தேவனுடைய நாமம் இந்த பூமியில் மகிமைபடுவதாக. ஆமென்