Friday 27 October 2017

யார் கிறிஸ்துவர்கள்.

                                      விசுவாசி கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , அந்நிய பாஷை பேசுகிறவர்கள். கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , அதிகமாக ஜெபிக்கிறவர்கள் கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , சுவிசேஷம் சொல்லுகிறவர்கள் கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , போதகம் செய்கிறவர்கள்  கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , நன்கு வேதம் தெரிந்து வியாக்கியானம் செய்பவர்  கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை. சுகமாக்கும் வரம் கொண்டவர்கள் கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை.  ஆலயத்துக்கு செல்கிறவர்கள்   கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , சாதி சான்றிதழில் கிறிஸ்துவன் என்று இருப்பதினால் கிறிஸ்துவனாக அழைக்கப்படவில்லை , இப்படி பட்டவர்களால் உண்மையான  கிறிஸ்தவர்கள்  மறைக்கபடுகிறார்கள் மேலும் இப்படிப்பட்டவர்களால் புறஜாதி மக்கள் இயேசுவின் அண்டை வரமுடியவில்லை கிறிஸ்து உங்களுக்குள்  இருந்தால் அவருடைய ஜனங்கள் உங்களோடு இருப்பார்கள் . அப்படியானால் யார்தான் கிறிஸ்துவர்கள்? என்று நினைக்கிறீர்களா? எளிதாக சொல்லிவிடலாம்  கிறிஸ்துவை பின்பற்றுகிற சீஷர்கள் தான் கிறிஸ்துவர்கள் என்று பரிசுத்த வேதகாமம் சொல்கிறது( அப்போஸ்தலர் 11. 26). உண்மைமையான சீஷர்களாக இருக்க விரும்புங்கள்

ஏனென்றால் சீஷர்கள் தான் அதிக கனிகளை தருகிறார்கள். அவர்களுக்கு இரண்டு குணங்கள் உண்டு ஒன்று தன்னைத்தான் வெறுக்கிறது மற்றொண்டு சிலுவையை எடுப்பது. என் சித்தம் அல்ல உம்முடைய சித்தம் ஆககடவது என்று அர்ப்பணிப்பவர்கள்.

இவர்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளை சிலுவையில் சிதைத்தவர்கள். கலாத்தியர் 5 :24

இவர்கள் மற்றவர்கள் பரிசுத்தமாகும்படி தன்னைத்தான் பரிசுத்தமாக்கிறவர்கள், யோவான் 17:19

இவர்கள் கிறிஸ்துவின் மேல் அன்பு வைத்தத்தினால் அவருடைய வார்த்தை கை கொண்டு கீழ்படிக்கிறவர்கள்.  யோவான் 14:15

இவர்கள் விசாலமான வழியை அல்ல இடுக்கமான வழியில் ஜீவனை கண்டவர்கள். மத்தேயு 7:14

இவர்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மட்டும் அல்ல அவருக்கா பாடு படுகிறவர்கள். பிலிப்பியர் 1:29

இவர்கள் இயேசு கிறிஸ்து இருக்கிற வண்ணமாக அவருடைய சாயலில் இருக்க விரும்புவர்கள். சாந்தமும் தாழ்மையுமாய் இருந்து நான் சிறுகவும் அவர் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள்மத்தேயு 11:29

இவர்கள் பிதாவையும் அவருடைய குமாரனையும் அறிந்தவர்கள். அவரை அறிவதற்கு எல்லாத்தையும் நஷ்டம் என்று விட்டவர்கள்.

இவர்கள் இயேசு கிறிஸ்துவால் தாயும் தகப்பனும் என்று புகழப்பற்றவர்கள்.

இவர்கள் தங்களை தாங்களே நியாயம் தீர்த்து வாழ்கிறவர்கள். கிறிஸ்துவின் வருகையின் போது அவரோடு நியாயம் விசாரிப்பவர்கள்.

இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமானத்தை செய்பவர்கள். அவருடைய சித்தம் செய்வதை போஜனமாக கொண்டவர்கள். 

இவர்கள் சுவிசேஷத்தை ஆதாய தொழிலாக கொள்ளாமல் அவருடைய அன்பினால் நிறைந்து ஊழியம் செய்கிறவர்கள். இவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட்டு , கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள்.  தேவனை அப்பாவாக அறிந்தவர்கள். சீஷர்கள் இந்த பூமியில் உத்தம வழிகளை பின்பற்றுகிறவகார்களை இருக்கிறார்கள். 

இவர்கள் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நன்கு உணர்ந்தவர்களை இருக்கிறார்கள். இயேசு கூறின ராஜரீக பிரமானத்தினை நிறைவேற்றுகிறார்கள், எப்போதும் அன்பின் கட்டுகளோடு இருக்கிறார்கள்.

எனவே கிறிஸ்துவுக்கு சீஷர்காளாக எழும்புவீர்களாக. கிறிஸ்துவனாக 
ஆமென்...



எழுதியவர் : தானியேல் 

No comments:

Post a Comment