Wednesday 24 June 2015

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்



தேவன் பரிசுத்தராக இருக்கிறார் நம்மை பரிசுத்தத்துக்கு அழைத்து இருக்கிறார் அவர் நம்மிடத்தில் வாசம் செய்ய விரும்புகிறார் ஏனென்றால் நம்மை படைத்தவர் அவரே. சர்வத்தையும் படைத்த  தேவன் நம்மீது அன்பாக இருக்கிறார்.அன்பான தேவன் நம் மத்தியில் வாசம் செய்வது எவ்வளவு இன்பமாக இருக்கும். அனேக கிறிஸ்துவர்கள் நிம்மதி, சமாதனம், இளைப்பாறுதல் இல்லாமல் இருகிறார்கள் சிலர் மன அழுத்தத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சமாதனம் சந்தோசம் தர நம்மை படைத்த ஆண்டவர் இருக்கிறார் என்று விசுவாசிகிறிகளா? மெய்யாகவே உங்களுக்கு கிடைக்கும்.  அன்பான தேவன் ஏன் எனக்கு சமாதனம் சந்தோசம் தரவில்லை என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும்.தேவன் சொல்லுகிற வார்த்தையை நீங்கள் அன்புடன் கைகொண்டால் அவர் மெய்யாகவே உங்களுக்கு விடுதலை கிடைக்கும். முதலில் அவருடைய சத்தியத்தை அறிய வேண்டும் அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும். அப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்குவார்  தேவன் அன்பாகவே இருக்கிறார். 

தேவனுடைய சத்திய வார்த்தைகள்   நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரெயர்13.5. இந்த காலகட்டத்தில், பண விசயத்தில் போதும் என்ற மனதுடன் இருக்கும் மனிதர்களை காண முடிவதில்லை, அதிக ஆசை படுகிறவர்கள் தான் அதிகம் போதும் என்கிற எண்ணம் இல்லை என்றால் ஆண்டவாரகிய இயேசு கிறிஸ்து உங்கள் மத்தியில் இருக்கமாட்டார். நீங்கள் கைவிடபடுவீர்கள். இதனால் நீங்கள் மன அழுத்தம், நிம்மதி இல்லாமை , சமாதனம் இல்லாமை போன்றவற்றிகுள்ள ஆகிறிகள். சத்திய வசனத்துக்கு அன்புடன் கீழ்படியுங்கள் சமாதானத்தை பெற்று கொள்ளுங்கள். 

II தீமோத்தேயு 2:22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. அனேக வாலிபர்கள் சிறுவயதிலே கண்களின் இச்சையில்  அடிமை பட்டு இருகிறார்கள். அவர்கள் பாவத்திலே சந்தோசம் அடைகிறார்கள். அதிலிருந்து மீளமுடியாமல் அவர்களுடைய வாழ்கையை  சீரடித்துகொள்கிரார்கள். இது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய்  இருக்கிறது, கண்களின் இச்சை, விபசாரம், வேசித்தனம் இவை அனைத்தும் மாயை இதன் முலம் அழிவை தேடி கொள்கிறீர்கள். இந்த உலகம் அழிந்து போகும் இதன்படி வாழுகிறவர்கள்  அழிந்த்துபோவார்கள். அவருடைய சத்தியத்தின்படி வாழுகிறார்வர்கள் அழிவதில்லை இது தேவனுடைய வார்த்தை   

No comments:

Post a Comment