Thursday 28 May 2015

நித்திய ஜீவனை குறித்து வேதாகமம் கூறுவது என்ன ?

நித்திய ஜீவனை குறித்து வேதாகமம் கூறுவது என்ன ?
எழுதியவர்  : தானியேல் 

நித்திய ஜீவனை பற்றி நாம் அதிகமாக புதிய ஏற்பாட்டில் பார்க்கிறோம். முதலில் நித்திய ஜீவன் என்றால் என்ன என்பதை பார்ப்போம் 
யோவான்3:17 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன், முதலில் நாம் மெய்தேவனையும் அவர் அனுப்பின இயேசுகிறிஸ்துவையும் நாம் அறிய வேண்டும் என்பதே .இதை படிக்கும் போது நீங்கள் என்னுடனே தியானிக்க வேண்டும் என்று விருப்புகிறேன். இந்த வசனம் கூறுகிறபடி  தேவனையும் இயேசுவையும் அறிய வேண்டும் என்றவுடனே வேதாகமத்தை முழுவதும் தெரிந்து  கொள்ளுதல் என்று அர்த்தம் இல்லை. வேதாகமத்தை இயேசுவை பின்பற்றாதவர்கள், விஞ்ஞானிகள், அறிவாளிகள் என அநேகர் வேதாகமத்தை படித்து தெரிந்து வைத்து இருகிறார்கள். சாத்தான்கூட இந்த வேதத்தை தெரிந்து வைத்து இருக்கிறான் என்று வேதம் சொல்லுகிறது. இதை மாதிரி நீங்கள் படித்து தெரிந்து வைத்தால் நித்திய ஜீவன் கிடைக்கும் என்று எண்ணாதீர்கள் அப்படியானால் நீங்கள் வஞ்சிக்கபடுவீர்கள். எனவே அப்போஸ்தலனகிய  யோவான் கூறும் அறிதல் என்பதை நாம் தெளிவு படுத்தி கொள்ளவேண்டும் 1யோவான் 2:3 வசனம் கூறுவது என்னவென்றால் அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம் இப்பொழுது நீங்கள் தெளிவு கொள்ளலாம் ஒன்றான மெய்தேவனும் அவர் அனுபினவராகிய இயேசுகிறிஸ்து கூறும் கற்பனைகளை கைக்கொள்ளவேண்டும் என்பதே. நாம் வேதகாமத்தை படித்து தெரிந்து கொள்ளுவதை விட அவருடைய கற்பனைகளை கைகொள்ளுவது மேலானது. அவருடைய கற்பனைகளை கைகொள்ளும் போது நாம் தேவனை நன்கு அறியமுடியும் அப்பொழுது நித்திய ஜீவனை தேவன் நமக்கு தருவார்.

யார் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும் ?

ஒரு தடவை இயேசுகிறிஸ்துவிடம்  இப்படியாக  கேள்வி கேட்டான் நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் அவர் கூறுகிறார் சில கற்பன்னைகளை மட்டும் கூறி அதை கை கொள் என்று சொல்லுகிறார் அவை   கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே அதற்க்கு அவன் நான் சிறு வயது முதல் இதை கைகொள்ளுகிறேன் இன்னும் என்னிடத்தில் என்ன குறை என்று கேட்டான் . அதற்க்கு இயேசு  நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். எனவே ஐசுவரியவான்கள் நித்திய ஜீவனுக்குள் போவது கஷ்ட்டமான காரியம்  

யார் நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க முடியும் ?

இந்த நித்திய ஜீவனை கொடுக்கிரறவர் வானத்திலிருந்து இரங்கி வந்ததவர் அவரே  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து அவர் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க முடியும்  யோவான் 10 :18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.எனவே அவருடைய கற்பணைக்கு நாம் செவி கொடுக்கவேண்டும். அவரே நமக்கு நல்ல மேய்ப்பராய் இருந்து கடைசி காலத்தில் நம்மை எழுப்புவார் 

  

No comments:

Post a Comment